Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாராயம் வாங்கி குடிக்க குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை; அதிர்ச்சி சம்பவம்!

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (08:07 IST)
சாராயம் வாங்கி குடிக்க ரூ.2.5 லட்சத்திற்கு பெற்ற குழந்தையை விற்ற தந்தை குறித்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.  
 
மகாராஷ்டிரா மாநில த்தில் உள்ள தாதர் ராவ் என்பவர் தற்போது தனது மனைவி குழந்தையுடன் தெலுங்கானா மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மதுவுக்கு அடிமையான நிலையில் சாராயம் வாங்க பணமில்லாமல் திண்டாடி உள்ளார் 
 
இதனை அடுத்து தனது மூன்று வயது மகனை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார். இந்த நிலையில் வீட்டில் மகனை காணாது தேடிப் பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து குழந்தை எங்கே என்று கேட்டபோது அவர் குழந்தையை விற்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
 
இதனை அடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்ய போலீசார் விரைந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தையை விற்பனை செய்த தந்தை மற்றும் குழந்தையை வாங்கிய நபர் என இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சாராயம் குடிப்பதற்காக 2.5 லட்சம் ரூபாய்க்கு பெற்ற குழந்தையை பெற்ற தந்தை குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments