Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 சிறந்த படைப்பாளிகளுக்கு 'கலைஞர் பொற்கிழி’ விருது- அமைச்சர் உதயநிதி

minister udhayanidhi
, புதன், 3 ஜனவரி 2024 (19:02 IST)
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பபாசி சாா்பில்   நடைபெறும் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

‘’47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி’ விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.

மேலும், பபாசி சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.

திமுக இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள முத்தமிழர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்! என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரும் 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தம்