Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தொகுதியில் தந்தையை எதிர்த்து மகள் போட்டி!

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (08:59 IST)
அரசியலில் தந்தை-மகன், அண்ணன் - தம்பி, தந்தை - மகள் ஆகியோர் ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்த செய்திகள் அவ்வபோது வெளிவந்து ஆச்சரியத்தை அளிக்கும். அந்த வகையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் தந்தையும் மகளும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
 
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இம்மாநிலத்தில்  தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுவதால் ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் கிஷோர் சந்திரதேவ் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இவர் அரக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கிஷோரின் மகள் ஸ்ருதி தேவியை வேட்பாளராக அறிவித்துள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாக கிஷோரின் அரசியல் பணிக்கு உதவியாக இருந்து அவருடைய அரசியல் வாரீசாக இருந்த ஸ்ருதி தற்போது அவருக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments