Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரத்தத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதிய விவசாயிகள் !

ரத்தத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதிய விவசாயிகள் !
, திங்கள், 21 டிசம்பர் 2020 (22:01 IST)
டெல்லியில் தொடர்ந்து 26 வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகள். இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 26 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தித், தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2020 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்: சினிமா நட்சத்திரங்களின் அரசியல் மையம்!