ரூ. 35 லட்சம் பறிக்க தந்தைக்கு போலி மாவோயிஸ்ட் மிரட்டல்: பணக்கார தொழிலதிபரின் மகன் கைது!

Siva
வியாழன், 16 அக்டோபர் 2025 (15:49 IST)
ஒடிசாவின் காலஹண்டி மாவட்டத்தில் உள்ள பணக்கார ஒப்பந்ததாரரின் ஒரே மகன், தனது தந்தையிடம் இருந்து ரூ. 35 லட்சம் பணம் பறிப்பதற்காக, மாவோயிஸ்டுகள் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
நார்லா காவல் நிலைய எல்லையில் வசிக்கும் அந்த இளைஞர், தனது ஆடம்பர செலவுகளுக்காக பணம் திரட்ட திட்டமிட்டார். இதற்காக, கோரப்பட்ட தொகையை வழங்காவிட்டால் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று அச்சுறுத்தி, மாவோயிஸ்டுகள் பெயரில் ஒரு கடிதத்தை தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார். 
 
இந்த கடிதம் குறித்து சந்தேகம் அடைந்த தந்தை, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையை தொடங்கியபோது, மிரட்டல் கடிதத்தை எழுதியது அவருடைய மகன் என்று கண்டறியந்தனர்.
 
போலீஸ் விசாரணையில், தனது குடும்பத்திடம் இருந்து பணம் பறிக்கவே தான் மாவோயிஸ்ட் மிரட்டலை இட்டதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments