Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.! மோகன் பகவத் வலியுறுத்தல்..!!

Senthil Velan
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (15:33 IST)
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
 
இட ஒதுக்கீடு விவகாரத்தில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்களின் வீடுகள், சொத்துகள், கோயில்களை சூறையாடினர். இதனால் அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலத்தில் தேசிய தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வருங்கால தலைமுறைக்கு  கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்றார்.

ALSO READ: பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள்.! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.! பிரதமர் மோடி ஆதங்கம்..!!

அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்களான சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும்  அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

சனாதனம் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

டிரம்ப்பின் ஈகோ, இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க கூடாது: அமெரிக்க எம்பி எச்சரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments