ஒடிசாவின் புரியில் நடைபெறும் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரையில், தொழிலதிபர் கௌதம் அதானி தனது மனைவி ப்ரீத்தி அதானி மற்றும் மகன் கரண் அதானியுடன் இணைந்து பங்கேற்றார். ஜெகந்நாதர் , பலபத்ரர், சுபத்ரா தேவியின் ஊர்வல சடங்குகளில் பக்தியுடன் கலந்து கொண்ட அதானி குடும்பத்தினர், கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் புனித பணிகளிலும் ஈடுபட்டனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த ஒன்பது நாள் விழாவில், அதானி குழுமம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதானி அறக்கட்டளை ஒருங்கிணைக்கும் இந்த சேவை முயற்சியில், பெரிய அளவில் உணவு மற்றும் தூய குடிநீர் விநியோகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 8 வரை, சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் உணவு மற்றும் பானங்களை வழங்க அதானி குழுமம் உறுதிபூண்டுள்ளது.
மேலும், நகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உள்ளாடைகள், தன்னார்வலர்களுக்கு டி-ஷர்ட்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்காக மழைக்கால உடைகள் ஆகியவையும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
புரி மாவட்ட நிர்வாகம், இஸ்கான், மற்றும் பல்வேறு உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து அதானி குழுமத்தின் இந்த தன்னார்வ சேவை, கோடிக்க்ணக்கான பக்தர்களுக்கு பெரும் ஆறுதலையும் உதவியையும் வழங்கியுள்ளது.