Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவில் இருந்து யானை??

அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவில் இருந்து யானை??
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:33 IST)
கேரளாவில் இருந்து இரண்டு யானைகள் தமிழகத்திற்கு அமைச்சர் ஒருவரின் மகன் திருமண விழாவிற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததையடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.


மதுரையில் நடந்த கஜபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யானைகள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அமைச்சர் மகன் திருமணம் நடைபெறும் இடத்தில் யானைகள் நிறுத்தப்பட்டன என தெரிகிறது.

செப்டம்பர் 30 அன்று நடந்த நிகழ்விற்கு விருந்தினர்களை வரவேற்க விலங்குகள் பயன்படுத்தப்பட்டன என்று ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் ஆர்டிஐ தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள வனத்துறையின் பதிலில், குறிப்பிட்ட தேதியில் யானைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்ல உண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறியது. இருப்பினும், சாது மற்றும் நாராயணன்குட்டி என்ற விலங்குகள் தமிழ்நாட்டின் மதுரைக்கு கஜபூஜைக்காக அழைத்துச் செல்லப்பட்டன, திருமணத்திற்காக அல்ல என்று வனத்துறை மேலும் கூறியுள்ளது.

இதற்கிடையில் இரண்டு யானைகளின் உரிமையாளர்கள், எந்த சட்டத்தையும் மீறவில்லை அல்லது எந்த தகவலையும் மறைக்கவில்லை. திருமண விழாவின் ஒரு பகுதியாக நடந்த கஜபூஜைக்காக விலங்குகள் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, இரண்டு யானைகளுக்கும் மாநில வனத்துறை உடற்தகுதி சான்றிதழை வழங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறாக ஆங்கில பத்திரிக்கையில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2023ஆம் ஆண்டின் நீட் நுழைவுத் தேர்வு தேதி எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு