Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை வாபஸ் பெற உத்தேசம்: எடியூரப்பா பேச்சு!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (09:49 IST)
ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தால் ஊரடங்கை திரும்ப பெற இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளார். இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா “மத்திய அரசு அனுமதி அளித்தால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெற இருப்பதாக கூறியுள்ளார்

மேலும் “கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநில அரசின் அனைத்து வகையான வருவாயும் நின்று விட்டது. அதனால் பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. முக்கியமான சில திட்டங்கள் மட்டும் செயல்படுத்தப்படும். கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரிசெய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments