Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு பணியில் உயிர்விட்ட காவலர்! – மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (09:21 IST)
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள மயிலாப்பூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி, சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் சென்னை பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அருண்காந்தியின் மறைவிற்கு திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் காவலர்களுக்கு பணி சுமை, மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் இருக்க அரசு அக்கறை காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments