Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகம்: மீட்க விரைந்த எடியூரப்பா

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (14:03 IST)
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. வடக்கு கர்நாடகா பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல ஊர்கள் மூழ்கியுள்ளன.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியின் அபாய அளவையும் தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நடியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமட்டி, நாரயணபுரா அணைகளில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பெலகா பகுதியில் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் காப்பாற்றி வருகின்றனர். மேலும் விடாது பெய்யும் மழையால் பல மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி சென்றிருந்த எடியூரப்பா பேரிடர் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளார். புதிய ஆட்சி அமைத்தும் இன்னும் மந்திரிகள் நியமிக்கப்படாததால் பேரிடர் மேலாண்மையை கை கொள்வதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments