Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரீயா விட்டாதானே நியூ இயர் கொண்டாட்டம்? – எடியூரப்பா அறிவித்த திடீர் ஊரடங்கு!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (13:39 IST)
கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது என நேற்று வரை சொல்லி வந்த முதல்வர் எடியூரப்பா இன்று திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் தொடங்கியுள்ள வீரியமுள்ள கொரோனா பரவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இங்கிலாந்திலிருந்து வரும் விமான சேவைகள் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் இரவினில் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்தபோது ஊரடங்கு அறிவிக்கப்படாது என நேற்று வரை கூறி வந்த முதல்வர் எடியூரப்பா தற்போது திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இன்று முதல் ஜனவரி 2 வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார். மக்கள் இரவு நேரங்களில் கூடுவதை தவிர்க்க திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கால் கர்நாடகா மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments