Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வைத்த ஆப்பு

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (21:05 IST)
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. அந்த வகையில் சற்றுமுன் தேர்தல் ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவு எஸ்.ஐ முதல் ஐ.ஜி.க்கள் வரை, தாசில்தார் முதல் ஆட்சியர்கள் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதால் அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments