ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

Mahendran
புதன், 5 நவம்பர் 2025 (16:47 IST)
ஹரியானா தேர்தலில் 'வாக்குத் திருட்டு' நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.
 
ஒரே நபர் பல அடையாள அட்டைகளுடன் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, வாக்குச்சாவடி முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை?
 
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதாவது ஒரு பிரேசில் மாடலின் புகைப்படம் பல பெயர்களில் பயன்படுத்தப்பட்டது உட்பட இருந்திருந்தால், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது காங்கிரஸ் கட்சி ஏன் புகார் அளிக்கவில்லை?
 
ராகுல் காந்தி, 25 லட்சம் போலி வாக்குகள் உருவாக்கப்பட்டதாகவும், ஒரே நபரின் புகைப்படம் 223 வாக்காளர் பெயர்களில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், வாக்குத்திருட்டு நடப்பதை தடுக்கவே சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
 
வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் குறித்து முன்னரே புகார் செய்யாதது ஏன்? என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு இக்குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன் என்றும் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments