Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் திடீர் நில நடுக்கம்.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (14:17 IST)
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு பிரிவினருக்கிடையில் மோதல் நடந்துவருவதால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மணிப்பூரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று காலை 11:06 மணிக்கு மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் ரிக்டர் அளவு 5.7 என பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இம்பால் கிழக்கு மாவட்டத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மணிப்பூர் மட்டுமின்றி அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12:20 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் மணிப்பூரில் பல கட்டிடங்கள் விரிசலுடன் காணப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments