Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான், ஆப்கானிஸ்தானை அடுத்து இந்தியாவில் நில அதிர்வு: ரிக்டரில் 3.9 ஆக பதிவு

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:22 IST)
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது என்றும், பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் ஜப்பான், ஆப்கானிஸ்தானை அடுத்து இன்று ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி. சுற்றறிக்கை..!
 
 ஏற்கனவே புவியியல் ஆய்வாளர்கள் ஜப்பான்,  ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் கீழ் உள்ள புவி தட்டுகள் ஒரே அடுக்கில் இருப்பதாகவும் ஒரு இடத்தில் நில அதிர்வு வந்தால் அடுத்தடுத்து மற்ற இடங்களிலும் வரும் என்றும் கூறியிருந்தனர். அது போலவே ஜப்பான் ஆப்கானிஸ்தானை அடுத்து இந்தியாவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments