Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் நிலநடுக்கம்....ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவு

Advertiesment
Earthquake in Delhi
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:26 IST)
டெல்லியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 5.9 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த மாதம் முதல் இங்கு, கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தகவல வெளியானதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த  நிலையில், இன்று மதியம் டெல்லி மற்றும் அதன் சுட்டு வட்டாரப் பகுதிகளில்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.இதில், வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், அதிலுள்ள பொருட்கள் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

 
இந்த நில நடுக்கம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?