Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (18:28 IST)
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கர் மற்றும் ஆப்கானிஸ்தானின்  இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகி ஆகியோர் இன்று தொலைபேசி மூலம் பேசினர்.
 
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை, தலிபான் அமைச்சர் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அவரது கண்டனத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த உரையாடலைப் பற்றி ஜெய்சங்கர் தனது எக்ஸ்  பக்கத்தில் கூறியதாவது:
“இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்க, சிலர் வெளியிட்ட பொய்யான செய்திகள் உண்மையற்றவை என தலிபான் அமைச்சர் திட்டவட்டமாக மறுத்ததை வரவேற்கிறேன்” என்றார்.
 
மேலும், இந்த உரையாடலில் இந்தியா மற்றும் ஆப்கன் மக்களுக்கு இடையேயான பழமையான நட்பு, மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த உரையாடல், இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments