Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

Advertiesment
ஷர்மிஷ்டா பணோலி

Siva

, ஞாயிறு, 1 ஜூன் 2025 (17:31 IST)
சமூக ஊடகங்களில் மத விவகாரங்களை தூண்டும் வகையில் பதிவிட்டதற்காக கொல்கத்தா போலீசால் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய கல்லூரி மாணவி ஷர்மிஷ்டா பணோலிக்கு நெர்தர்லாந்து எம்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரும் வலதுசாரி "பார்ட்டி ஃபார் ஃபிரீடம்" கட்சியின் தலைவருமான கீயர்ட் வில்டர்ஸ், ஷர்மிஷ்டா பனோலியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளை பெறுவதற்காக இந்து பெண்ணை கைது செய்ய்துள்ளதாகவும் இதுவொரு திமிரான நடவடிக்கை என்று   கூறியதுடன், அவரை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
"தைரியமான ஷர்மிஷ்டா பனோலியை விடுதலை செய்யுங்கள்! அவர்கள் சொன்னது உண்மைதான்.  அவரது கருத்துகளுக்காக கைது செய்தது வாக்கு சுதந்திரத்திற்கு அவமானம். அவரை தண்டிக்க வேண்டாம்  என வில்டர்ஸ் X தளத்தில் பதிவு செய்தார். அதனுடன் இணைக்கப்பட்ட புகைப்படத்தில், "All eyes on Sharmistha" என்று எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று கொல்கத்தா போலீசார், ஷர்மிஷ்டா பனோலியை, சமூக ஊடகங்களில் பதிவிட்ட வீடியோக்கள் தொடர்பாக கைது செய்தனர். அந்த வீடியோக்களில் அவதூறான மற்றும் மத சார்ந்த விரோத பேச்சுக்கள் இருந்ததுடன், பாலிவுட் நடிகர்கள் "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து பேசாததற்காக அவர்களை குற்றம் சாட்டியிருந்தார்.  
 
ஆனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதும், ஷர்மிஷ்டா அந்த வீடியோவை நீக்கி, மன்னிப்பும் கேட்டுள்ளார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!