Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (15:52 IST)
‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!
‘த்ரிஷ்யம்’ படத்தில் நாயகன் மோகன்லால் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலையை கடைசிவரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஆதாரங்களை அழிந்திருப்பார். அந்த வகையில் சகோதரர்கள் இருவர் தங்கள் தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
புனேவில் திருமணத்தை மீறிய உறவு கொண்ட தந்தையை கொலை செய்ய திட்டமிட்ட சகோதரர்கள் அவரை கொலை செய்து விட்டு உடலை எரித்து விட்டனர். அதன் பின்னர் விசாரணையை திசை திருப்புவதற்காக தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தபோது சகோதரர்கள் இருவரும் தான் கொலை செய்தது அம்பலமானது. அவர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது ‘த்ரிஷ்யம்’ படத்தை பார்த்து கொலை செய்துவிட்டு ஆதாரங்களை அழித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments