Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது!

அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது!
, வெள்ளி, 23 டிசம்பர் 2022 (14:45 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், ''திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக  பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில்,  பாஜக  மாநிலத் துணைத் தலைவர் திருமதி  சசிகலா புஷ்பா அவர்களின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கிய திமுகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று  அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2023 புத்தாண்டுக்கு ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் ஆஃபர்!