Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (15:52 IST)
‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரர்கள்!
‘த்ரிஷ்யம்’ படத்தில் நாயகன் மோகன்லால் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலையை கடைசிவரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஆதாரங்களை அழிந்திருப்பார். அந்த வகையில் சகோதரர்கள் இருவர் தங்கள் தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
புனேவில் திருமணத்தை மீறிய உறவு கொண்ட தந்தையை கொலை செய்ய திட்டமிட்ட சகோதரர்கள் அவரை கொலை செய்து விட்டு உடலை எரித்து விட்டனர். அதன் பின்னர் விசாரணையை திசை திருப்புவதற்காக தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தபோது சகோதரர்கள் இருவரும் தான் கொலை செய்தது அம்பலமானது. அவர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது ‘த்ரிஷ்யம்’ படத்தை பார்த்து கொலை செய்துவிட்டு ஆதாரங்களை அழித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments