Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுதைக்கு இருக்கும் கருணை கூட இல்லையா? ஐயப்பன் தந்திரி குறித்து அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (08:19 IST)
கேரள அமைச்சர் ஒருவர் கழுதைக்கும் இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோவிலில் இருக்கும் தந்திரிக்கு இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கேரளாவில் உள்ள ஆலப்புழா நகரில் நடைபெற்ற கலாசார விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் சுதாகரன் பேசியதாவது: சபரிமலையில் உள்ள கழுதைகள்  தினமும் கடினமான பணிகளை செய்து வருகிறது. ஆனால் ஒருநாள் கூட அந்த கழுதைகள் போராட்டம் நடத்தியதில்லை.  கடுமையான பணிக்குப் பின் பம்பை நதிக்கரையில் கழுதைகள் ஓய்வெடுக்கின்றது. அவற்றுக்கு இருக்கும் கருணைகூட ஐயப்பன் மீது சபரிமலை கோயில் தந்திரிக்கு இல்லை என்று சுதாகரன் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.

கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் சுதாகரனின் இந்த கருத்துக்கு சபரிமலை தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருவதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த நிலையில் சபரிமலையில் அமைதி திரும்பவும் அதன் புனிதத் தன்மை காக்கப்படவும் இந்த விவகாரத்தில் ஆளுநர் சதாசிவம் தலையிட வேண்டும் என பாஜக தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments