கர்நாடகாவில் மனைவியின் சமையல் மோசமாக இருப்பதாக கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள விஸ்வநாதபுரா பகுதியை சேர்ந்தவர் நாகரத்னா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நாகரத்னாவின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில காலமாக கணவன், மனைவி இடையே மனஸ்தாபம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு உணவின்போது நாகரத்னா வைத்த சாம்பார் மோசமாக உள்ளதாக குழந்தைகள் முன்னர் நாகரத்னாவை அவரது கணவர் மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த நாகரத்னா இரவு எல்லாரும் தூங்கிய பிறகு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
காலை எழுந்து நாகரத்னா தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீஸில் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K