Publish Date: Fri, 27 Mar 2020 (15:51 IST)
Updated Date: Fri, 27 Mar 2020 (15:54 IST)
வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளில் மூலம் வாங்கி பொருடகளுக்கும் ஆர்.பிஐயின் இந்த சலுகைகள் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத்தெரிவித்தார்.
சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்:
மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
மேலும் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
ரெப்போ வட்டிக் குறைந்ததால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளில் மூலம் வாங்கி பொருட்களுக்கும் ஆர்.பிஐயின் இந்த சலுகைகள் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஆர்பிஐ தரப்பில் விளக்கமான பதில் வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Sugapriya Prakash
Publish Date: Fri, 27 Mar 2020 (15:51 IST)
Updated Date: Fri, 27 Mar 2020 (15:54 IST)