Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

Advertiesment
Uttarpradesh
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:33 IST)
வயிற்று வலி என சிகிச்சைக்கு வந்த பெண்ணை, செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றார்.
 
அப்பெண்ணை சோதித்த மருத்துவர், ஒரு களிம்பை கொடுத்து, பக்கத்தில் உள்ள அறைக்கு சென்று, அதை வயிற்றில் தடவி விட்டு வரும்படி கூறியுள்ளார். அப்பெண்ணும் அங்கு சென்று களிம்பை தடவியுள்ளார். அப்போது அந்த அறையின் கூறைப்பகுதியில், ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அந்த செல்போனை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். 
 
போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவை விடாது துரத்தும் கருப்பு: ஆர்.கே.நகர் வெற்றி செல்லுபடியாகுமா?