Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

Siva
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (07:42 IST)
ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் நடைபெற்ற சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்திற்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீதத்திற்கும் இடையே 30% அதிகமாக வித்தியாசம் இருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் உள்ள எண்ணிக்கையில் பெரிய அளவு மாறுபாடு இருப்பது ஏன் என்ற கேள்வியை பிஜு  ஜனதா தளம் எழுப்பி உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கட்சியின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பதும், பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments