டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சாப்ட்வேர் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி.. 3 பேர் கைது..!

Siva
செவ்வாய், 21 ஜனவரி 2025 (13:04 IST)
சமீபகாலமாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புது வகையான மோசடி நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் இதில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை  பலர் இழந்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் கைது செய்திருப்பதாக சாப்ட்வேர் பொறியாளரிடம் 11.8 கோடி ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் பொறியாளர் விஜயகுமார் என்பவர் ஒரு மாதமாக டிஜிட்டல் கைது செய்யப்பட்டார் என்றும், மோசடி நபர்கள் காவல்துறை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட தனது சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக மர்ம நபர்கள் கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இதே போல் இன்னும் அவர்கள் பலரை ஏமாற்றி இருப்பது விசாரணை மூலம் தெரியவந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், இன்னும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments