பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையத்தை இந்தியா தாக்கியதா என்ற கேள்விக்கு புன்சிரிப்புடன் ஏர் மார்ஷல் ஏகே பாரதி சொன்ன பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையம் சேதமடைந்ததாகவும் அணுக்கதிர்கள் கசிய தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் தான் பாகிஸ்தான் அவசர அவசரமாக சமாதான உடன்படிக்கைக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஏர் மார்ஷல் ஏகே பாரதி அவர்களிடம் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையமான கிரானா ஹில்ஸ் தாக்கப்பட்டதா? என்று கேட்டபோது, கிரானா ஹில்ஸ் என்பது அணு ஆயுத மையம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டதை நான் வரவேற்கிறேன் என்று புன்சிரிப்புடன் கூறிய அவர், கிரானா ஹில்ஸ் அணு ஆயுத மையம் தாக்கப்பட்டதா என்று எங்களுக்கு தெரியாது என்று கூறி சிரித்தார். அந்த சிரிப்பில் பல ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.