Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக ஷிண்டே பதவியேற்பு.. முடிவுக்கு வந்த இழுபறி.!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (18:16 IST)
மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் துணை முதல்வராக ஷிண்டே ஆகியோர் பதவியேற்றதை அடுத்து, கடந்த சில நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும், இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியை தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்தக் கட்சிக்கே முதல்-மந்திரி வேட்பாளர் என்று கூறப்பட்டது. ஆனால் ஷிண்டே அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், சற்றுமுன் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கு முதல்வர் பதவிக்கான பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் ஷிண்டே துணை முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் தலைவர் கார் மீது மோதிய சுரேஷ் கோபி மகன் கார்.. கேரளாவில் பெரும் பரபரப்பு..!

தமிழக முதல்வர் உள்பட 10 முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்: அதிர்ச்சி தகவல்கள்

அரசு பள்ளியில் பூட்டப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவி: உயிரை காப்பாற்ற சன்னலில் சிக்கி படுகாயம்!

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு போலி ஆதார் அட்டை.. 8 பேர் கொண்ட கும்பல் கைது..!

சென்னை தூய்மை பணியாளர் பரிதாப பலி..! திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments