தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்: தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்

Mahendran
வியாழன், 5 டிசம்பர் 2024 (17:41 IST)
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்ப தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் என இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தேர்வுகளை எழுதி சான்றிதழ் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டம் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாடத்திட்டம் மாற்றப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம் குறித்த தகவல்கள் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதனை தேர்வு எழுதுபவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments