Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை: தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (16:58 IST)
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  
 
இன்று சபரிமலைக்கு சென்ற ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.   
 
இவர்களை திருப்பி அனுப்பும்படி தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, கேரள அரசும் இரு பெண்களை சன்னதிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்புமாரு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கேரள அரசு தேவசம் போர்டு இதுகுறித்து முடிவு எடுக்கலாம் என அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில், இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தற்போது பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, சபரிமலையின் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை உச்சநீதிமன்றத்திடம் சொல்வோம். இதனை ஒரு அறிக்கையாக சம்ர்பிக்க உள்ளோம். 
 
திருவாங்கூர் தேவ்சம் போர்டு எப்போதும் தங்களது பாரம்பரியத்தை விட்டு கொடுக்காது. மேலும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து விரைவில் இந்த தீர்ப்பில் மறுசீராய்வு செய்யப்படும். தேவசம் போர்டின் முடிவிற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments