சென்னையில் பயங்கரம்: பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (16:54 IST)
சென்னையில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை அவரது தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் வசந்தி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது வசந்திக்கும் ஜெபராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியது.
 
இருவரும் நெருங்கிப் பழகவே வசந்தி கர்ப்பமுற்றார். இதனை வசந்தி தன் பெற்றோரிடம் மறைத்துள்ளார். ஆனால் 7வது மாதத்தில் அவர் தனது தாயிடம் சிக்கிக்கொண்டார். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான அவரின் தாய் குழந்தை பிறந்தவுடன் கொன்றுவிடும்படி வனிதாவிடன் கூறியுள்ளார்.
 
அதன்படி இரண்டு தினங்களுக்கு முன்பு, வனிதா குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் தனது தாய் மற்றும் காதலனின் உதவியோடு, அந்த பிஞ்சுக்குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
பின்னர் ஒன்றும்தெரியாததுபோல் குழந்தையை குப்பைத் தொட்டிக்குள் வீசியுள்ளார். சிசிடிவி மூலம் போலீஸார் இந்த கொடூர கொலையை செய்த மூவரையும் கைது செய்தனர். பிஞ்சுக்குழந்தயை பெற்றோர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments