Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை! – டெல்லியில் துவக்கம்!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (14:41 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் கொரோனா சிகிச்சைகளுக்காக 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஆறு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தலைநகர் டெல்லி மாநில அளவிலான பாதிப்புகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் பாதிப்புகளை கட்டுப்படுத்த 10 ஆயிரம் படுக்கைகளை கொண்ட சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர். டெல்லி ஹரியானா எல்லைப்பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையை இந்தோ-திபெத் எல்லை படையினர் கண்காணிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களும், அறிகுறிகள் இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்போரும் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments