டெல்லியை சேர்ந்த ஒரு நபர், தனது கல்லூரி சீனியர் போல ஆள்மாறாட்டம் செய்து, மலிவு விலையில் வீட்டு உபகரணங்களை விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்றார்.
மோசடி என்று உறுதி செய்த இளைஞர், ChatGPT செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு எளிய, ஆனால் பயனுள்ள இணைய பக்கக் குறியீட்டை உருவாக்கினார். அந்த பக்கம், கிளிக் செய்பவரின் ஜிபிஎஸ் இருப்பிடத்தையும் சாதனத்தின் முன் கேமராவை பயன்படுத்திப் புகைப்படத்தையும் இரகசியமாக பதிவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டது.
மோசடிக்காரர் பணம் செலுத்த கோரி அனுப்பிய QR குறியீட்டை பயன்படுத்த தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக நடித்த இளைஞர், 'கட்டணம் விரைவாக செலுத்த' தான் அனுப்பிய இணைப்பில் QR குறியீட்டை பதிவேற்றுமாறு மோசடிக்காரரிடம் கூறினார்.
பேராசையால் அந்த இணைப்பை கிளிக் செய்த மோசடிக்காரரின் சரியான இருப்பிடம் மற்றும் முகத்தின் புகைப்படம் இளைஞருக்கு கிடைத்தது.
இதையடுத்து, இளைஞர் மோசடிக்காரருக்கு அவரது சொந்த புகைப்படம் மற்றும் இருப்பிட விவரங்களை அனுப்பினார். அதிர்ச்சியடைந்த மோசடிக்காரர், உடனடியாக பீதியடைந்து, தனது மோசடி நடவடிக்கைகளை நிறுத்துவதாக கூறி மன்னிப்புக் கேட்க தொடங்கினார்.
இந்தச் சம்பவம் ரெட்டிட்டில் வைரலாகி, AI-ஐ மோசடி தடுப்புக்குப் பயன்படுத்திய இளைஞரின் புத்திசாலித்தனத்தை பலரும் பாராட்டினர்.