Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் இல்லைனா டெல்லியை காப்பாத்த முடியாது??! – உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு கோரிக்கை

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:56 IST)
டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி படுத்த கோரி டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய அரசை கேட்டுக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள டெல்லி அரசு “டெல்லி மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் டெல்லி மிகப்பெரும் சீரழிவை சந்திக்கும்” என்றும் கவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments