Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியை விசிட் அடித்த கையோடு அமித்ஷாவுடன் மீட்டிங் போட்ட மம்தா!

மோடியை விசிட் அடித்த கையோடு அமித்ஷாவுடன் மீட்டிங் போட்ட மம்தா!
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (15:38 IST)
நேற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவ சந்தித்துள்ளார் மம்தா பானர்ஜி. 
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடியும் கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக அரசியல் நடத்தி வந்தனர். இதனால் இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது அந்த விழாவிக்கு கூட செல்லாத மம்தா, மோடியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
 
ஆனால் நேற்று பிரமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தில் துவங்கப்பட உள்ள உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். 
webdunia
இந்நிலையில், மோடியோடு நிறுத்தி விடாமல் மம்தா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திபின் பின்னர் மம்தா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, 
 
நான் அசாம் என்.ஆர்.சி பிரச்சினையை குறித்து உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பி அவருக்கு ஒரு கடிதம் கொடுத்தேன். அசாம் என்.ஆர்.சியில் இருந்து 19 லட்சம் பேரை விலக்குவது குறித்து நான் அவரிடம் பேசினேன். அவர்களில் சிலர் இந்தி, பெங்காலி மற்றும் கோர்கா பேசும் மக்கள் மற்றும் உண்மையான இந்திய வாக்காளர்கள் எனவும் தெரிவித்தேன் என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யானைகளைக் காட்டி நிதி திரட்டி மோசடி செய்த தனியார் அமைப்புகள் –நீதிமன்றம் அதிரடி !