Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூதாட்டத்தால் கடன்! மனைவியை நண்பனிடம் விற்ற கணவன்!

Advertiesment
girl abuse

Prasanth K

, புதன், 25 ஜூன் 2025 (10:01 IST)

மத்திய பிரதேசத்தில் சூதாட்டத்தில் பட்ட கடனுக்காக மனைவியை கணவன் விற்றதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உள்ள கன்வான் பகுதியில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். தான் சம்பாதித்தது மட்டுமல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கியும் அவர் சூதாடி வந்துள்ளார். சுமார் ரூ.50 ஆயிரம் அளவிற்கு அவருக்கு கடன் இருந்த நிலையில், அதை அடைப்பதற்காக தனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கியுள்ளார்.

 

ஆனால் அதை திரும்ப செலுத்தாமல் இருந்ததால் அவரது நண்பர் அவரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு அந்த நபர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை வைத்துக் கொள்ளுமாறு தனது நண்பனிடம் மனைவியை கொடுத்து விட்டார். 

 

அதன்பின்னர் அந்த நண்பர், அந்த பெண்ணை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரிடமிருந்து தப்பி வந்த பெண் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மனைவியை விற்ற கணவனையும், அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

84 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே திறக்கப்படும் KRS அணை! காவிரியில் வெள்ளப்பெருக்கு!