Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிபா வைரஸ் - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Advertiesment
கேரளா
, திங்கள், 28 மே 2018 (12:33 IST)
கேளாவில் நிபா வைரசால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
முதலில் வவ்வால்கள் மூலம் இந்நோய் பரப்பப்படுகிறது என தகவல் வெளியானது. ஆனால் வவ்வால்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ததில் நிபா வைரஸ் பரவலுக்கு காரணம் வவ்வால்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி சூடு சம்பவம் - குமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்