Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுக்கு பார்த்த பெண்ணுடன் காதல்.. மாமனாருடன் ஓடிய மருமகள்!

Prasanth K
சனி, 21 ஜூன் 2025 (11:55 IST)

உத்தர பிரதேசத்தில் மகனுக்கு பார்த்த பெண்ணை தந்தை ஓடி போய் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் சகீல். இவருக்கு சபானா என்ற பெண்ணுடன் திருமணமாகி 6 பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சமீபத்தில் பெண் பார்த்துள்ளனர். ஒரு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்த நிலையில், பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த சகீல், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க இருந்த பெண்ணுடன் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளார்.

 

அடிக்கடி இருவரும் வீடியோ காலிலும் பேசி வந்த நிலையில் இது காதலாக மலர்ந்துள்ளது. இது தெரிய வந்து சகீலின் மனைவி சபானா அவரை தட்டிக் கேட்க, அதற்கு சபானாவை அடித்துள்ளார் சகீல். சகீலின் இந்த செயலால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அவரது மகன் மறுத்துவிட்டார்.

 

இந்நிலையில் மகன் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம், 17 கிராம் தங்கத்தை எடுத்துக் கொண்டு, மகனுக்கு பார்த்த பெண்ணையே இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார் சகீல். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments