Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (15:44 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம், திருமண நிகழ்ச்சியை திருமண மண்டபத்தில் நடத்தியதற்காக அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தக் குடும்பம் நேற்று முன் தினம் இரவு தங்கள் சொந்த ஊரிலுள்ள திருமண மண்டபத்தில்  குடும்ப உறவினர்களுடன் திருமணத்தை நடத்தினர். இதை  விரும்பாத சிலர், சாதி தீவிரவாத மனப்பான்மையுடன் மண்டபத்தில் புகுந்து, தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்துவதா என கூறியபடி தடியால் தாக்கினர் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது சாதி வேறுபாடு சார்ந்த குற்றமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக நீதியை நிலைநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்