Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவிழந்த அம்பன்: நாளை கரை கடக்கும் என தகவல்!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (11:29 IST)
அம்பன் வங்கதேசம் பகுதியில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த வாரம் அந்தமான் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, இரண்டே நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த நாளே புயலாகவும் மாறியது அம்பன். சூப்பர் புயல் என்னும் மிக அபாயமான கட்டத்தை எட்டியுள்ள அம்பன் வங்கதேசம் பகுதியில் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தற்போது வலுவிழந்துள்ள இந்த புயல் கொல்கத்தாவிற்கு சுமார் 700 கீமி தொலைவில் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது இது மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை கரையை கடக்கும். 
 
புயல் கடக்கும் போது மேற்று மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று மணிக்கு 150 - 160 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புண்டு. எனவே கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments