Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நோ வைக்கோல், ஒன்லி சிக்கன்”..அடம்பிடிக்கும் பசு மாடுகள்

Arun Prasath
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (10:08 IST)
கோவாவில் சாலைகளில் சுற்றித்திரியும் பசு மாடுகள் சிக்கன், மட்டன் மட்டுமே சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

கோவா மாநிலத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் பசு மாடுகளை அம்மாநில அரசு கோசாலைகள் அமைத்து பராமரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாடுகள் வழக்கமாக சாப்பிடும் வைக்கோல் போன்ற உணவுகளை சாப்பிடுவதில்லை எனவும், சிக்கன், மட்டன், மீன் வருவல் ஆகியவை மட்டுமே சாப்பிடுகிறது எனவும் புகார் எழுந்துள்ளது.

இது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில கழிவு மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ, பசு மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்த போது, ஹோட்டலில் இருந்து கொட்டப்படும் குப்பைகளில் உள்ள சிக்கன், மட்டன், மீன் வறுவல் ஆகிய உணவுகளை தின்று பழகி இருப்பதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

ஆனால் இதனை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அதாவது, பசு மாடுகள் தாவரபட்சிகள், அவைகள் மாமிசங்களை சாப்பிடுவதை நம்பமுடியவில்லை, அப்படியே அது மாமிச உணவுகளை சாப்பிட்டாலும், வைக்கோல், பில் ஆகியவற்றை கொடுத்தால் அதனை தான் விரும்பி சாப்பிடும்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments