Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (10:05 IST)
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கெனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாகவும் இந்த காற்றழுத்த பகுதி ஒருசில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கக்கடலிலும் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தோன்றியுள்ளதால் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிரது
 
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான ஆந்திராவில் கடல் சீற்றம் அதிக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவை, கேரளா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments