Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (17:06 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த   நிலையில், அவர் மீது பாலியல் புகார்கள்  கடத்தல் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நித்யானந்தா , கைலாசா என்ற தனித் தீவில் தன் சிஷ்யர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ வெளியிடுவதில்லை. ஆனால், நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  நித்யானந்தா விவகாரம் தொடர்பாக இன்டர்போல் கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளது. நித்யானந்தா விவகாரத்தில், கர்நாடக சிஐடி போலீசாரிடம் கூடுதல் விவரங்களை இன்டர்போல் போலீஸ் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத  நித்யாந்னதாவுக்கு ராம்நகர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்