Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி தேர்வு.. 9 மாத கர்ப்பிணிக்கு சிறப்பு அனுமதி அளித்த நீதிமன்றம்..!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (17:32 IST)
நீதிபதி தேர்வு எழுதும் கர்ப்பிணி பெண்ணுக்கு சிறப்பு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் நீதிபதி பணிகளுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்வு ஜூலை 23ஆம் தேதி நடந்த நிலையில் அதில் பிரதான தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பெங்களூரில் இன்றும் நாளையும் தேர்வு நடைபெறுகிறது 
 
இந்த நிலையில் இந்த தேர்வில் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றிருந்த மங்களூரை சேர்ந்த நேத்ராவதி என்பவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் தேர்வு எழுத மங்களூரில் இருந்து பெங்களூருக்கு வர முடியாத நிலையில் இருப்பதால் தனது சொந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார் 
 
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு சிறப்பு அனுமதி அளித்து அவர மங்களூரில் தேர்வு எழுத அனுமதி அளித்தது. நீதிமன்ற தேர்வில் முதல்முறையாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments