Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர் காலம் கொரோனா வீரியத்தை அதிகரிக்கும் ஆபத்து...

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (13:03 IST)
பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலம் என்பதால் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்நிலையில் அமைச்சர் ஹர்ஷவர்தன் பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, எந்த மதமும், கடவுளும் பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட வலியுறுத்தவில்லை. இப்போது வருவது குளிர் காலம். குளிர்காலத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வரும் பண்டிகை காலத்தை யாரும் கொண்டாட கூடாது. மாறாக பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாடுங்கள் என அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments