Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நீதான் என் வாழ்க்கை” மேட்ரிமோனி வழியாக வந்த காதல்! – பெண்களிடம் வாலிபர் மோசடி!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (13:02 IST)
திருவண்ணாமலையில் பெண்களிடம் திருமண ஆசை காட்டி நகைகளை மோசடி செய்த இளைஞரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருந்த நிலையில் திருமணத்திற்கான மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். அதன்மூலமாக திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திக் ராஜாவும் அந்த பெண்ணை மணந்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என கார்த்திக் ராஜா கேட்க அந்த பெண்ணும் தனது நகைகளை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு கார்த்திக் ராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் திருமண வரன் பார்க்கும் ஆன்லைன் தளங்கள் மூலமாக இப்படியாக பல பெண்களிடம் பேசி கார்த்திக் ராஜா நகைகளை பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்