Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

15 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இன்றைய நிலவரம்

15 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இன்றைய நிலவரம்
, புதன், 29 ஜூலை 2020 (10:32 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 15 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ள இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 15,31,669 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 34,193 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 9,88,029 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,114 பேர் பலியான நிலையில் 2,30,650 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் 3,648 பேர் பலியாகியுள்ளனர். 1,67,972 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் பள்ளிகள் விளம்பர பலகை வைக்க கூடாது!– அமைச்சர் செங்கோட்டையன்!