Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4.56 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – மாநில வாரி நிலவரம்!

4.56 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – மாநில வாரி நிலவரம்!
, புதன், 24 ஜூன் 2020 (09:23 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரேநாளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,531 பேர் பலியான நிலையில் 69,631 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 64,603 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 27,825 பேரும், டெல்லியில் 66,602 பேரும், ராஜஸ்தானில் 15,627 பேரும், மத்திய பிரதேசத்தில் 12,261 பேரும், உத்தர பிரதேசத்தில் 18,893 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் கல்விக்கு அரசின் இணையதளம்! – பள்ளிக்கல்விதுறை ஏற்பாடு!